Cinema news Tamil
உலக அளவில் சினிமா துறையில் மிகச் சிறந்த விருதாக கருதப்படும் விருது ஆஸ்கர் விருது.இந்த விருது இந்த ஆண்டு மார்ச் மாதம் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல் நகரில் நடைபெற உள்ளது.இந்த விருதுக்கு இந்திய படங்களில் இந்த ஆண்டில் வெளிவந்த 301 படங்கள் அனுப்பி வைக்கப்பட்டது.அந்தப் பட்டியலில் இருந்து பத்து திரைப்படங்களின் பெயர்களை ஆஸ்கார் விருது குழுவினர் தேர்ந்தெடுத்து உள்ளனர்.அந்த வகையில் பார்த்திபன் நடித்து மற்றும் இயக்கிய படம் இரவின் நிழல்,மாதவன் இயக்கி நடித்த ராக்கெட் ரீ திரைப்படம்,ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஆர் ஆர் R திரைப்படம்,ரிஷப் ரெட்டி நடித்த இயக்கியகாந்தாரா மற்றும் குஜராத் படமான செல்லோ சோ,ஹிந்தி படங்களான கங்கு பாய் கத்திய வாடி,தி காஷ்மீர் பைல்ஸ்,மீ வசந்த்ராவ்,தி நெக்ஸ்ட் மார்னிங், விக்ராந்த் ரோனா போன்ற படங்களாகும்.. இதில் காந்தரா திரைப்படத்திற்கு இரண்டு விருதுகளுக்கான வாய்ப்புகள் இருப்பதாக செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.
உலகம் முழுவதும் திரைப்படம் நேற்று.துணிவு திரைப்படம் .இதில் அஜித் குமார் கதாநாயகன் , மஞ்சு வாரியர் கதாநாயகி.இந்தப் படத்தை எச் வினோத் இயக்கி போனி கபூர் அவர்கள் தயாரித்துள்ளார்.இந்தப் படத்தின் இசை அமைப்பாளர் ஜிப்ரான் ஆவார்.இந்தப் இந்தப் படத்தில் அஜித்குமாரின் நடிப்பு ஆர்ப்பாட்டமானதாகவும்,கலகலப்பாகவும் அதிரடியாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இதுவரை இல்லாத அளவுக்கு சென்னை தீவுத்திடலில் மாபெரும் அஜித் குமாரின் பிரம்மாண்ட கட் அவுட் வைக்கப்பட்டுள்ளது.இந்தக் கட்டவுட் வைக்கப்பட்டதன் மூலம் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை துணிவு படம் ஏற்படுத்தி இருக்கிறது.
மதுரை செல்வம் தயாரிப்பில் செல்வ அன்பரசன் இயக்கும் திரைப்படத்தின் பெயர் பழனிசாமி வாத்தியார்.இந்தப் படத்தில் கதாநாயகனாக நகைச்சுவை நடிகர் கவுண்டமணி நடிக்கிறார்.இந்தப் படத்தில் மேலும் சிறப்பு அம்சமாக யோகி பாபு, கஞ்சா கருப்பு, மற்றும் ராதாரவி ,மனோபாலா மற்றும் முன்னணி கதாநாயகன் ஒருவர் போன்றவரும் நடிக்க உள்ளனர் என்று செய்தி வட்டாரங்கள் குறிப்பிடுகின்றது.
கே ஜி எஃப் திரைப்படத்திலிருந்து யாஷ் மாற்றப்பட்டார்.2018 இல் வெளியான கேஜிஎப் இல் யாஷ் மற்றும் நிதி செட்டி ஜோடியாக நடித்திருந்தனர்.பிரசாந்த் நீல் இயக்கி இருந்தார்.இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் மாதத்தில் வெளியாகி வசூல் சாதனை புரிந்தது என்பது அனைவரும் அறிந்தது.தமிழ் ,கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் வெளிவந்து சுமார் ஆயிரம் கோடிக்கு மேல் கே ஜி எஃப் இரண்டாம் பாகம் வசூலித்து வசூல் சாதனை புரிந்தது.
இந்த வரிசையில் கேஜிஎப் படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் தயாராக உள்ளது என்றும், முதல் ஐந்து பாகங்கள் வரை மட்டுமே யாஷ் நடிக்க நடிப்பார் என்றும் கே ஜி எஃப் ஆறாம் பாகத்தில் யாசுக்கு பதிலாக வேறு ஒரு கதாநாயகன் நடிப்பார் என்றும் செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.மேலும் கே ஜி எஃப் இன் மூன்றாம் பாகமானது 2025 ஆம் ஆண்டு தொடங்கும் கே ஜி எஃப் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரத்தில் வெளியேறிய நான்கெழுத்து நடிகை
0 Comments
Just Rs .500 per month
If you want link your page or add any advertisement in this webpage kindly visit https://goldratepage.blogspot.com/p/advertise-here.html